Sunday, August 23, 2015

ஒன்று முதல் பத்து!
-----+-------------------------
ஒன்றாய் இருப்பதே ஒற்றுமை! வேற்றுமை
வந்தால் இரண்டாகி மூன்றாம் நபர்களின்
வஞ்சகத்தால் வம்பாக மாறியே நாலாகி
ஐந்தாகி சண்டையால். காயத்தால் ரத்தமோ
தன்பங்கில் ஆறாக ஏழுபேர்  கூட்டமாக
நின்றே இணக்கத்தை எட்டுகூறாய் வெட்டிவிட
ஒன்பதில் கோபத்தை ஓடவிட்டால் பத்துவகைப்
பண்புகளைப் பந்தாடும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home