Wednesday, October 28, 2015

வீடு
-----------------
அன்று! பரபரப்பாய் மங்கலமாய் நாள்தோறும்
வந்தவர்கள் சென்றவர்கள் என்றே விருந்தினர்கள்
கொண்டாடிக் கண்குளிர வாழ்ந்திருக்கக் கண்டவீடோ
இன்று தரைமட்டந் தான்.

தரைமட்ட மானவீட்டை மீண்டுமிங்கே கட்டிக்
கலைவண்ணம் கண்கவரப் பூசிடுவார் நாளை!
களைகட்ட வேறொருவர் வாங்கித்தான் வாழ்வார்!
சுழற்சிப் பிடியில்தான் சொத்து.

0 Comments:

Post a Comment

<< Home