Sunday, November 08, 2015

ஆகா!
=================
விண்ணகம் தாயெனின் சேய்கள் முகிலினங்கள்
கொண்டாட்டம் போட்டுத்தான் ஆடுதடா தாய்மடியில்!
வெண்ணிலவும் விண்மீனும் அங்கே ரசிக்கின்ற
கண்கவரும் காட்சியைப் பார்.

காலைப் பொழுதிலே வாசலிலே நீர்தெளித்துக்
கோலமிட்டு வீட்டில் விறகடுப்பை ஊதிஊதி
பால்காய்ச்சி காப்பிபோட்டு நின்று கணவனை
கால்தொட் டெழுப்பும் மனைவியின்
அன்பிலே
வாழ்ந்திருந்தார் முன்னோர்கள் தான்.

ஆட்டுக்கல் ஆட்டித்தான் மாவரைத்து வைக்கவேண்டும்!
மூச்சிரைக்க நின்று கிணற்றிலே நீரிறைத்து
வீட்டைப் பெருக்கிக் கழுவி விடவேண்டும்!
மாட்டுப்பெண் அல்லவா! பார்.

வீட்டில் இருப்பவர்க்கும் நாடி வருவோர்க்கும்
கூட்டுக் குடும்பச் சமையல் வகைகளை
மூட்டு வலிக்க விறகடுப்பில்
தாக்குகின்ற
என்றும் புகையில் திணறிச் சமைத்தவளே
அன்று மருமக ளாம்!

0 Comments:

Post a Comment

<< Home