Wednesday, October 28, 2015

நேர்வழியே நிம்மதி!
---------------------------------------------------------
நேர்வழியில் வாழ்ந்திருந்தால் முன்னேற்றம் தாமதமாய்
வாரி அணைத்தாலும் தாயின் அரவணைப்பைப்
போலிங்கே நிம்மதிதான்! ஆனால் குறுக்குவழி
மூர்க்கத் தனத்தால் திரண்டுவரும் முன்னேற்றம்
ஊர்மெச்ச வந்தாலும் நோயின்  அரவணைப்பைப்
போல்தான் பதறவைக்கும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home