Wednesday, November 18, 2015

மழையே! மழையே!
-------------------------------------------
மழையே மழையே நின்றுவிடு!
மக்களைக் கொஞ்சம் வாழவிடு!

வம்புகள் செய்யும் குழந்தைகள்போல்
அடம்பிடித் தேனோ அழுகின்றாய்?

எட்டுத் திசைகளில் பெருக்கெடுத்தே
வெள்ள மாக ஓடுகின்றாய்!

அழையா விருந்தினர் வந்ததுபோல்
வீட்டுக் குள்ளே வந்துவிட்டாய்!

பாத்திரம் பண்டம் மிதக்கிறது!
பசியால் வாடித் துடிக்கின்றார்!

மழையே மழையே நின்றுவிடு!
மக்களைக் கொஞ்சம் வாழவிடு!

0 Comments:

Post a Comment

<< Home