Sunday, July 03, 2016


நதியிணைப்பு

கண்டபடி பாய்ந்தோடும் வெள்ளத்தால் சேதங்கள்
அம்மம்மா சொல்லித்தான் மாளாது-- கண்மணியே
நாட்டின் நதிகளை எல்லாம் இணைத்துவிட்டால்
காக்கலாம் நம்நாட்டைத் தான்.

மாநிலங்கள் போர்க்கொடி தூக்குவதைப் பாருங்கள்!
ஏனிந்தப் போக்கோ தெரியவில்லை! வீணாகிப்
போனாலும் போகலாம் இந்தியாவில் மற்றெந்த
மாநில மக்களுக்கும் தண்ணீர் கிடையாது
என்ற எதிர்ப்பினைச் சாடு.

0 Comments:

Post a Comment

<< Home