Tuesday, June 28, 2016

ரசித்தேன்

படீர்படீர் என இடியோசை
பளீர்பளீர் என மின்னலின் கீற்று
சுளீர்சுளீர் என பெருமழை தாக்கம்
கலீர்கலீர் என அருவியின் சிரிப்பு
கலகல வென்றே நதியின் ஓட்டம்
சிலுசிலு வென்று தென்றலின் தீண்டல்
கீச்கீச் சென்ற பறவையின் இன்னிசை
காச்மூச் சென விலங்குகளின் சத்தம்
ரசித்துரசித்து நடந்தேன் நான்தான்

0 Comments:

Post a Comment

<< Home