Sunday, July 03, 2016


நிம்மதி உன்பார்வையில்

கிடைத்திருக்கும் வாழ்வை ரசிப்பதை விட்டுக்
குறைகளை எண்ணிக் குமைந்திட வேண்டாம்!
நிறைகளை எண்ணியே நிம்மதி கொள்வோம்!
நிறைகளில் மகிழப் பழகு.
கடையனுக்கும் கடைத்தேற்றம்?

படுஉயர மாமலையோ இப்பக்கம்! அம்மா!
கிடுகிடு பள்ளமோ அப்பக்கம்! கண்ணே!
தடுமாறித் தத்தளிக்க வைக்கும் வறுமை!
படும்பாடு திண்டாட்டந் தான்.

0 Comments:

Post a Comment

<< Home