Sunday, October 02, 2016



நிம்மதி எங்கே?

அடுக்கக வீடுகளில் நள்ளிரவு நேரத்தில்
படுத்தாலும் தூக்கமின்றி வாழ்கின்ற மாந்தர்கள்!
அடுக்கக சாளரத்தில் விளக்கொளி அங்கங்கே!
துடுப்புண்டு! ஓடமுண்டு! நிம்மதி ஆழியில்லை!

நிம்மதி இங்கே

ஓலைக் குடிசையிலே படுக்க இடமில்லை
காலை மடக்கித்தான் கைகளைத் தலையணையாய்
ஆக்கித்தான் நிம்மதியாயத் தூங்குகின்றார்! கண்மணியே!
ஏக்கமில்லை தாக்கமில்லை நிம்மதிக்குப் பஞ்சமில்லை!

0 Comments:

Post a Comment

<< Home