Wednesday, September 28, 2016


பாடல் முயற்சி

தென்றல் பாடும் ராகத்தில்
பூக்கள் மயங்கி பூக்குமே

பறவை சேர்ந்து பாடுமே
அலைகள் கூட்டம் ஆடுமே

அருவி யெல்லாம் சிரிக்குமே
மலைகள் கேட்டு மலைக்குமே

மரங்கள் இங்கே சிலிர்க்குமே
வயல்கள் வாழ்த்துப் பாடுமே

இயற்கை காட்சி எங்குமே
இன்பம் இன்பம் இன்பந்தான்

நமது காதல் வாழ்க்கையும்
இன்ப மாக மாறுமே

0 Comments:

Post a Comment

<< Home