Saturday, September 24, 2016

எல்லோரும் வாழ்வார்!

மதிப்பெண்கள் வாங்க குழந்தைகள் தம்மை
படியென்று நாளும் பிழிந்தெடுக்க வேண்டாம்!
படிப்பார்கள் என்றேதான் நம்பிக்கை வைப்போம்!
படிப்படியாய் முன்னேற்றம் எல்லோர்க்கும் உண்டு!
எதிர்காலம் வாய்ப்பைத் தரும்!

கல்வி! அறிவுத் திறனை வளப்படுத்தும்!
கல்விக்கும் வாழ்வை வளப்படுத்தும் வேலைக்கும்
எள்ளளவு கூட தொடர்பின்றிப் போகலாம்!
கல்வி, தகுதிக்குச் சான்று.

0 Comments:

Post a Comment

<< Home