Saturday, December 31, 2016

யுத்தகாண்டம்

இராவணன் மந்திராலோசனை

அழிந்த இலங்கை நகரை மயனோ
எழில்நகராய் மாற்றினான் பார்.

பேரிழப்பைச் சந்திக்கும் தந்திரத்தைக் கூறுங்கள்!
ஆர்ப்பரித்தான் ராவணன் அங்கு.

படையெடுப்போம்! கொன்று குவித்திடுவோம்! மன்னா!
விடைகொடு செல்வோம் உடன்.

மாற்றான் மனைவியைத் தொட்டதால் பேரிழப்பு!
தூற்றினான் கும்பகர்ணன்! பார்.

மனமிரங்கி சீதையை விட்டுவிடு!
இல்லை
தினவெடுக்கும்  நம்பகைவர் சேர்ந்தே

அனலாகும் முன்பே அவர்களைத் தாக்கி
மணலாக்கு என்றான் துணிந்து.

இந்திரசித் முன்வந்தான் ! போருக்கு நான்தயார்
என்னை அனுப்பென்றான் ஆர்த்து.

வீடணன் நின்றே குரங்கால் அழியவில்லை
நாடழிந்த காரணத்தைக் கேள்.

 கற்புநெறி நாட்டை அழித்தது! அண்ணாநீ
போதை மயக்கம் தெளி.

அண்ணன் இராவணா! சீதையை விட்டுவிடு
நம்நாட்டைக் காப்பாற்றப் பார்.

அந்த மனிதர்கள் வெல்வார்! உணர்ந்தேதான்
பண்படப் பாரென்றான் பார்த்து.

சினத்தால் கடிந்தான் இராவணன்! மேலும்
கனன்றான் கடுஞ்சொற்கள் கொண்டு.

என்முன்னே நிற்காதே! வீடணனே! சென்றுவிடு!
என்றான் இளவலைப் பார்த்து.

0 Comments:

Post a Comment

<< Home