Sunday, February 19, 2017

பாற்கடலும் பதவிக்கடலும்!

பாற்கடல் பொங்கிய நேரத்தில் செல்வங்கள்
ஊற்றெடுத்து வந்ததாம்! நாட்டில் அரசியலார்
பாற்கடலை விஞ்சும் பதவிக் கடலிலே
ஊற்றெடுக்கும் ஊழலால் செல்வத்தைச் சேர்க்கின்றார்!
பாற்கடலே நாணியதே இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home