Tuesday, June 20, 2017

.இயற்கை தந்த நன்கொடை

மலைமுகட்டில் முகிலினங்கள் கொஞ்சி விளை யாடும்!
மரக்கிளையில் புள்ளினங்கள் இசைமீட்டிப் பாடும்!
கடலுக்குள் மீன்பிடிக்க கடற்கரையில் நாரைகள் கூடும்!
கடலலைகள் கரைதொட்டே
கடலுக்குள் மீண்டுந்தான் ஓடும்!

சோலையிலே வண்ணவண்ண மலரினங்கள் சிரித்தேதான் ஆடும்!
நீலமேகப் பரப்பினிலே வெண்ணிலாதான் தோன்றும்!
அங்கங்கே குழந்தைகள் நிலாவைத்தான் காட்டும்!
அம்மாவின் கரங்களோ மழலைக்கு அமுதத்தைத்தான் ஊட்டும்!

மலையிடையில் அருவிகளோ துள்ளிவந்து வீழும்!
அருவிகளோ நதிகளாக மாறித்தான் ஓடும்!
அலைக்கரத்தில் கயலினங்கள்
அங்குமிங்கும் தாவும்!
மீன்வலைகள் கயல்பிடிக்க எத்தனித்துச் சூழும்!

கண்கவரும் சித்திரங்கள்
இயற்கைதந்த நன்கொடை!
நன்றிசொல்லி வாழ்ந்திருப்போம்
மண்ணுலகில் நாமெல்லாம்!

0 Comments:

Post a Comment

<< Home