Thursday, November 02, 2017

மணவாழ்த்து


  மணமகள்            மணமகன்
பி.கே.ராஜலக்ஷ்மி        இ.பிரதீப்

மணநாள்: 29.10.2017 ஞாயிறு

அரங்கம்:சந்த் நிரங்காரி சத்சங் பவன்

                      இருமனம் ஒன்றும் திருமண வாழ்வில்
                      கரம்பிடித்தே இல்லறத்தை ஏற்கின்ற நீங்கள்
                      நிரங்காரி வாழ்வியலைப் பின்பற்றி நாளும் .
                      அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

                      அன்பு, பணிவு, மரியாதை இம்மூன்றும்
                      நன்மதிப்பைத் தந்தே உயரவைக்கும்! உள்ளத்தால்
                      என்றும் மனிதநேயப் பண்புடன்  வாழ்ந்தால்
                      உங்களை வாழ்த்தும் உலகு.

                      மதகுருவின் ஆசியுடன் பக்திநெறி போற்றி
                      மதத்தால் கடவுளை உணர்ந்து சேவைக்
                      கடமைகளை நாளும் ஒற்றுமையுடன் செய்தே
                      அகமகிழ்ந்து வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home