Monday, December 18, 2017


கேடுகள் நீங்குமா?(18.12.2017)

ஓகி புயலே குமரியின் மக்களை
வாடி வதங்கவைத்தாய்! என்னதான் கோபமோ?
தேடிவந்த மீனவரைப் பந்தாடி பார்த்துவிட்டாய்!
தேடுகின்றார் தேம்பி அழுகின்றார்! ஓலங்கள்
நாடுதோறும் கேட்கிறதே! அக்கரைச் சீமையிலும்!
வீடுகள் தோறும் விரக்தியின் உச்சங்கள்!
போதுமடா சாமி! துயரத்தின் வேதனைகள்!
கேடுகள் நீங்குமா? கூறு.

0 Comments:

Post a Comment

<< Home