Saturday, December 16, 2017

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!

இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் எங்கெங்கோ
சொந்தங்கள் வாழ்கின்ற கோலங்கள்! பிள்ளைகள்
கண்டு பழகுகின்ற வாய்ப்புகள் இல்லையே!
சென்ற தலைமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால்
இந்தத் தலைமுறை ஏதோ இருக்கின்றார்!
அந்தோ! தெரியும் அடுத்த தலைமுறையோ
கண்டாலும் அப்படியா? என்றே ஒதுங்கிடுவார்!
சொந்தங்கள் யாரோ? உறவுகள் யார்யாரோ?
அன்றே கனியன்பூங் குன்றனார் சொன்னதே
இன்றைய வாழ்க்கைக்குத் தான்.

0 Comments:

Post a Comment

<< Home