Saturday, April 21, 2018



இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 17

நட்டார்க்கு நல்ல செயல் இனிது;
எத்துணையும்ஒட்டாரை ஒட்டிக் கொளல்
 அதனின் முன் இனிதே;பற்பல தானியத்ததாகி,
 பலர் உடையும்மெய்த் துணையும் சேரல் இனிது.

நண்பருக்கு நன்மைகள் செய்தல் இனிதாகும்!
மண்ணில் பகைவரையும் நட்பாக்கும் நற்பண்புக்
கன்னல்  சுவைபோல் இனிது! சமயத்தில்
வந்தே உதவுகின்ற நட்பைத் துணையாகக்
கொண்டிருத்தல் வாழ்வில் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home