Friday, July 27, 2018


திருக்குறள்
------------------------------
விருந்தோம்பல் -- 9
--------------------------------------------------------------------------------------------------
விருந்தளிக்கும் பண்பே குடும்பத்திற்கு அழகாகும்
---------------------------------------------------------------------------------------------
ஈட்டல் காத்தல் இல்லறத்தில்
விருந்தின ரோடு மகிழ்வதற்கே!

வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க
அவரை விட்டுத் தனியாக
உண்பது மாபெரும் தவறாகும்!
அமிழ்தே எனினும் நஞ்சாகும்!

விருந்தின ரைத்தான் உபசரித்தால்
வாழ்க்கை வறுமையில் அழியாது!
மலர்ந்த முகத்துடன் வரவேற்றால்
செல்வத் திருமகள் வசித்திருப்பாள்!

விருந்து முடிந்தபின் மிச்சத்தை
உண்பவர் நிலத்தில் பயிரினங்கள்
விதைக்கா மல்தான் வளர்ந்திருக்கும்!

வந்தவர் செல்ல வருவோரை
அன்புடன் வாழ்த்தி வரவேற்றால்
சான்றோர் உலகே மகிழ்ந்திருக்கும்!
அங்கே விருந்தினர் ஆகிடுவார்!

கருமித் தனமாய் இருந்தவரின்
செல்வம் அழியும் நேரத்தில்
விருந்தின் பயனே அறியாமல்
வாழ்ந்தேன் என்றே வருந்திடுவார்!

தொட்டுற வாடும் விருந்தினரைப்
பாரா முகமாய் வரவேற்றால்
மோந்ததும் வாடும் அனிச்சம்பூ
போல வாடித் தளர்ந்திடுவார்!


0 Comments:

Post a Comment

<< Home