Friday, July 27, 2018

திருக்குறள்
------------------------------
வான்சிறப்பு --2
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மழை இல்லையேல் உயிரினம் இல்லை

வான்மழை செழிப்பைத் தருவதாலே
வான்மழை நமக்கு அமுதந்தான்!

உணவைச் சமைக்க உதவிடுமே!
தானும் உணவாய் மாறிடுமே!

மழையோ பெய்யத் தவறிவிட்டால்
உயிரினம் பசியால் துடித்திடுமே!

மழையின் அளவோ குறைந்துவிட்டால்
உழவுத் தொழிலும் செழிக்காது

வளமாய் வாழ்ந்தோர் வளமிழப்பார்!
மழையோ இங்கே பொழிந்துவிட்டால்
வளத்தை இழந்தோர் வளம்பெறுவார்!

மேகம் மழையைப் பொழியாமல்
வேக மாக நகர்ந்துவிட்டால்

பசும்புல் நுனிகள் தழைக்காது!
அலைகடல் இங்கே வற்றிவிடும்!

வாழ்க்கை எல்லாம் வறண்டுவிடும்!
உலகின் இயக்கம் நின்றுவிடும்!

பூசை திருவிழா நடக்காது!
தான தர்மம் நடக்காது!
மனிதம் இங்கே வளராது
ஒழுக்கப் பண்பு இருக்காது!
தண்ணீர் மட்டும் இல்லைö¯ன்றால்
யாருக்கும் இங்கே வாழ்வில்லை!
 

0 Comments:

Post a Comment

<< Home