Friday, December 07, 2018

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!

மனைவி கணவனுக்கும் அஞ்சமாட்டாள்! ஆனால்
தினந்தோறும் பேரனுக்கும் பேத்திக்கும் அஞ்சும்
மனங்கொண்டே கெஞ்சுவாள் வம்புகளை எண்ணி!
கணவனும் இப்படித்தான் தாத்தாவாய் ஆனால்
சுணங்காமல் ஆடிஓடி பேரக் குழந்தை
மனங்குளிர ஆணைகளை ஏற்றே நடப்பான்!
மனமெல்லாம் பாசத்தின் ஊற்று.

0 Comments:

Post a Comment

<< Home