Wednesday, February 06, 2019

எனக்குநீ உனக்குநான்!

இதுதான் வாழ்க்கையா?
இறுதியில் தனிமையா?

இல்லறத்தின் தொடக்கத்தில்
இருவராய் வாழ்ந்திருந்தோம்

குழந்தைகள் சேர்ந்தன
வளர்ப்பிலே பரபரப்பு

அந்தந்த பருவத்தில்
கடமையில் பரபரப்பு

அவரவர்க்கு இல்லறம்
அமைத்ததில் பரபரப்பு

சிறகுகள் முளைத்தன
அவரவர் வாழ்க்கையில்

அவரவர் கவனங்கள்
அவரவர் அக்கறை

மீண்டும் இருவராய்த்
தனிமைச் சிறகுகள்

வயதான காரணத்தால்
தளர்நடைத் துணைவர

எனக்குநீ உனக்குநான்!
கடந்தகால நிகழ்வுகளில்!

இதுதான் வாழ்க்கையா?
இறுதியில் தனிமையா?

0 Comments:

Post a Comment

<< Home