Sunday, February 03, 2019

குழந்தைகளுக்குக் குறளமுதம்!

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

நண்பா நண்பா தமிழரசா
உன்னைப் பாக்கப் பெருமைதான்!

மகனை மகளை வளர்ப்பதற்கு
உழைத்த உழைப்பை நானறிவேன்!

அன்பு நண்பா தமிழரசா
மகளின் மகனின் திறமைகள்

 ஊடகம் மூலம் நானறிந்தேன்!
மேடைப் பேச்சில் இருவருமே

அருமை அற்புதம் ஆகாகா!
கேட்போர் எல்லாம் வியக்கின்றார்.!

மாநில அளவில் கல்வியிலும்
மதிப்பெண் நிறைய வாங்குகிறார்.

பெற்றோர் நீங்கள் அவர்களுக்கு
ஆற்றிய கடமை உணர்வாலே

அவையில் முந்தச் செய்தீர்கள்
அவர்களும் கனவை நினைவாக்கி

பெயரும் புகழும் எடுக்கின்றார்!
வாழ்க வாழ்க தமிழ்போல!

உங்கள் முயற்சி வீணில்லை!
குறளின் பொருளே நீங்கள்தான்!


0 Comments:

Post a Comment

<< Home