Wednesday, July 24, 2019

சந்திராயன்

சந்திராயன் 2 சாதனை!

சிவனார் மாங்கனிக் கதை

கற்பனை நகைச்சுவைக்காக!

சிவனார் உலகத்தைச் சுற்றிவிட்டு வானில்
நிலவுக்குப் போக அனுப்பிவிட்டார்! நானும்
நிலவின் நிலத்தில் பதிந்து நிலைத்து
களஆய்வை மேற்கொள்வேன்! வாழ்த்துவார் மக்கள்!
உலவும்  எனது பெருமையை  எண்ணி
சிலிர்ப்பாக  உள்ளதே! கீழேநான் பார்த்தால்
சிவனாரும் மற்ற அலுவலரும் சேர்ந்து
செயலுணர்வில்  கூட்டமாக உள்ளனர்! நானோ
உலவுகின்றேன் தன்னந் தனியாக விண்ணில்!
மயில்சாமி முன்னின்ற காரணத்தால் வெற்றிக்
களிப்பில் சிவனார் மயில்சாமி கையில்
அளித்தார் உவப்புடன் மாங்கனி தன்னை!
அளிப்பார் முயற்சி பல.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home