Wednesday, October 30, 2019

இந்தப்பிறவியே உண்மை!

சென்ற பிறவி தெரியாது! வாழ்கின்ற
இந்தப் பிறவி தெரிகிறது!சென்றபின்னே
எந்தப் பிறவி எடுப்போம்  தெரியாது!
உண்மையாய் வாழ்ந்திருப்போம் இன்று.

நல்லதும் கெட்டதும் இப்பிறவிப் பக்கங்கள்!
உள்ளதை உள்ளவாறே ஏற்றுக் கடக்கவேண்டும்!
நன்மைக்கோ இப்பிறவி தீமைக்கோ முற்பிறவி
என்ற நிலைவேண்டாம் காண்.

முந்தைப் பிறவியா? இந்தப் பிறவியா?
எந்தப் பிறவியோ என்றேதான் கேட்பதை
விட்டுவிட்டு உள்ளத்தில் மாசின்றி  உன்கடமைச்
சுற்றை நிறைவேற்று இன்று.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home