Tuesday, October 29, 2019

தமிழுணர்வு கொள்!

என்னமதம் என்னசாதி என்றுகேட்டால்
நாமெல்லாம்
இந்துஎன்று சொல்லாமல் நாங்கள் தமிழென்றே
அஞ்சாமல்   சொல்லி நிமிர்ந்திருப்போம்
மண்ணகத்தில்!
செந்தமிழே நம்மதம்! சொல்.

மதஉணர்வு  நம்மை விலக்கிப் பிரிக்கும்!
மதத்தை விலக்கி தமிழுணர்வு கொண்டால்
மகத்தான ஒற்றுமை நல்லிணக்கம் தோன்றும்!
அகத்தில் தமிழுணர்வு கொள்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home