Monday, November 18, 2019

விடியல்!

சோலைச் செடிகளில் வண்ணவண்ண மொட்டுகள்
காலைப்  பொழுதிலே கண்கொள்ளாக் காட்சிதான்!
நேயமுடன் தென்றல் தழுவ  இதழிதழாய்
தூய மலர்களாய் அங்கே மலர்ந்தன!
பாமழையால்  புள்ளினங்கள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ள
காலாற அங்கே நடந்துசென்றேன்! பாதையிலே
பால்காரர் செய்தித்தாள் நண்பர்கள் ஆரவாரம்
வாசலிலே வண்ணவண்ணக் கோலங்கள் பூத்திருக்க
ஈடற்ற காட்சிதான் பார்.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home