Thursday, November 21, 2019

மலரும் நினைவுகள்!

தெய்வத்திரு மூர்த்திக்கு அஞ்சலி!

ஆண்டாண்டு காலம் உறவின் தொடர்பின்றி
காணுகின்ற வாய்ப்பின்றி வாழ்ந்தோம் திடீரென்றே
நானிங்கே மூர்த்திதான் பேசுகிறேன் என்றேதான்
நான்குரல் கேட்டேன் மகிழ்ந்தேன்! மதுரையில்
நாங்கள் சிறுவராய்ப் பார்த்துப் பழகிய
காலம் மனதில் மலரும் நினைவுகளாய்
வந்துபோக  எந்தன் மனத்திரையில் ஓடியது!
என்னசெய்ய மாந்தரின் எல்லையை மீறிய
இந்த மரணத்தைப் பார்த்தே அழுகிறோம்!
நம்மைநாம் தேற்றவேண்டும் பார்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home