Wednesday, November 20, 2019

மூர்த்திக்கு இரங்கல் கவிதை!

உறவைப் புதுப்பித்து
அவ்வப்போது
பேசத்தொடங்கினோம்!

சில நாள்களுக்கு முன்புகூட
கவிதை படித்துக் காட்டி
எனது கருத்தைக் கேட்டாய்,!

நன்றாகத்தானே இருந்தாய்!
இவ்வளவு சீக்கிரம்
பிரிந்து செல்வாய்
என நனைக்கவே இல்லை மூர்த்தி!

தொலைபேசி வந்தபோது
நீதான் பேசுகிறாய் என்று
பிறகு பேசுகிறேன் என்றான்!
நான் ஒரு கடையில் இருந்தேன்!

கேட்ட செய்தியில் நிலைகுலைந்தேன்!

மரணம்
தவிர்க்க முடியாதது.
கடமைகள் முடித்த
நிம்மதி கிடைத்தால்
வாழ்க்கை முழுமைபெறும்.

உனது
நினைவுகள்
என்னுடன்
எப்பொழுதும் இருக்கும்!

இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை
உன் குடும்பம்
தாங்குவதற்கு
வல்லமை கொடுக்க
இயற்கையை வேண்டுகிறேன்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home