Friday, November 15, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்!
---------------------------------------------------------
புலால் மறுத்தல்-- 26
----------------------------------------------------------
இறைச்சி உண்பதைத் தவிர்
--------------------------------------------------------------
நமது உடலின் வளர்ச்சிக்கு
மற்றொரு உடலைப் புசிப்பவர்கள்
கருணை கொண்டோ ராவாரோ!

பொருளைக் காக்கத் தவறுவோர்க்குப்
பொருளால் சிறப்பு கிடையாது!
 இறைச்சி உண்ணும் மனிதருக்கோ
அருளால் சிறப்பு கிடையாது!

வன்முறை கொண்ட உள்ளத்தில்
இரக்கமோ துளியும் இருக்காது!

உயிரைக் கொன்று தின்பவர்க்கோ
அருளின் சிறப்பு கிடையாது!

ஊனை உண்னல் அருளில்லை!
உயிர்க்கொல் லாமை அறமாகும்!

புலாலை மறுத்தால் பிறஉயிர்கள்
உலகில் வாழும் வாய்ப்புண்டு!

புலாலை வெறுக்கும் நிலையெடுத்தால்
விற்கும் தொழிலே இருக்காது!

இறைச்சி, உயிரின் புண்ணாகும்!
உண்பதை அறவே ஒழிக்கவேண்டும்!

உயிரைப் பிரிந்த உடல்தன்னை
சான்றோர் இங்கே உண்ணமாட்டார்!

ஆயிரம் யாகங்கள் செய்வதினும்
உயிரைக் கொன்று உண்ணாமல்
வாழ்வதே என்றும் மேலாகும்!

புலாலை வெறுக்கும் மாந்தரையோ
புவியே வணங்கும் கைகூப்பி!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home