Friday, January 24, 2020

கூடாநட்பு கேடாய் முடியும்!

கூட்ட மாக தவளைகள்
குளத்தில் வாழ்ந்து வந்தன!

முதுமை வயதுப் பாம்பொன்று
அங்கே வந்து சேர்ந்தது!

குட்டிப் பையன் தவளைக்கு
ஆட்டம் பாட்டம் காட்டியது!

குட்டிப் பையன் மகிழ்ந்திருந்தான்
ஆடிப் பாடி வாழ்ந்திருந்தான்!

அரசன் மகனை எச்சரித்தான்
மகனோ ஏற்க மறுத்துவிட்டான்.

அரசத் தவளையை நாடித்தான்
ஒருநாள்  பாம்பு சென்றது!

அரசே எனக்குப் பசிக்கிறது
தினமொரு தவளை உணவானால்

எந்தன் பசியும் தீருமே
நூற்றுக் கணக்காய்த் தவளைகள்

இங்கே உள்ளன என்றதுபார்!
அரசத் தவளை மறுத்தவுடன்

குட்டிப் பையன் அடம்பிடித்தான்
அரசனும் அதற்குச் சம்மதித்தான்

பாம்போ தினமும் தின்றதுவே
வலிமை்யுடனே வாழ்ந்ததுவே

அரசனும் அரசியும் ஊருக்குச்
சென்ற நேரம் தவளைகளை

பிடித்து உண்டு் மகிழ்ந்ததுபார்
கொஞ்சம் தவளை இருந்தனவே

அரசக் குடும்பம் திரும்பியது
தவளை நிலையை அறிந்தது

அங்கே இருந்த பாம்புவந்து
அரசனைப் பிடிக்கப் பாய்ந்ததுபார்

அரசக் குடும்பம் தப்பியது
பாம்பை அடித்து விரட்டியது

கூடா நட்பு கேடாக
முடியும் உணர்ந்தால் நல்லது!

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home