Thursday, January 16, 2020


திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி விருது வள்ளுவர் கோட்டத்தில் சி.ரா.அவர்களுக்கு வழங்கப்பட்டது

திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி
வள்ளுவர் குரல். குடும்ப நெறியாளர்
மேதகு.இராசேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துப்பா!

16.02.2020

சுங்கத் துறையில் பணிபுரிந்து சாதனைகள்
அங்கங்கே அந்தத்  துறையிலே செய்தாலும்
அங்கேயும் தேன்குறள்கள் தம்மை வளாகத்தில்
எங்கும் பொறித்தவரை வாழ்த்து.

வீட்டில் நுழைந்ததும்  வள்ளுவர் சிற்பமே
வாசலில் நம்மை வரவேற்கும்! சொல்லொன்று
செய்யும் செயலொன்று என்றேதான் வாழாமல்
சொன்னதை வள்ளுவத்தைப் பின்பற்றி
வாழ்கின்றார்,!
புன்னகைக்கும் வள்ளுவரைப் போற்று.

திருக்குறள் பண்பாட்டுச் சிற்பியே வாழ்க!
இருவரிக் குறளை இதயத் துடிப்பாய்த்
துடிக்கவைத்தே வாழும் இராசேந்ரன் வாழ்க!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home