Friday, February 14, 2020

கருத்து: திருமூலர் பாடல்

வதந்தி!

பார்வையற்றோர் யானையைத் தொட்டே
காதுகளை,
தூற்றும் முறமென்றார், காலை உரலென்றார்
வாலைத் துடைப்பமென்றார்,  நீண்ட
துதிக்கைக்கு
ஈடாய் உலக்கையென்றார், கோல முதுகையோ
மாமலை யென்றார்கள், கொம்பான தந்தத்தை
ஆகாகா தண்டென்றார்  தூண்டும் வதந்திகளை
நாடறிய இப்படித்தான் மக்களே நம்புகின்றார்!
ஏடறிய சொன்னேன் முயன்று.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home