Friday, February 28, 2020

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

உறவே உயிர்ப்பு!

வீடுதேடி வந்தோரை  நாடி வரவேற்றால்
கூடுகட்டும் நல்லுறவு! வாழ்க்கை இணக்கமாகும்!
பார்த்தபோதும் பாராமல் சென்றால் இறுக்கமாகும்!
பாரில் உறவே உயிர்ப்பு.

வந்த விருந்தினரை அன்பாய் வரவேற்கும்
பண்பறிந்து வாழ்ந்தால் மகிழ்ச்சி பெருகிவரும்!
இந்த விருந்தோம்பல் என்றும் இருவருக்கும்
சொந்தமாகும் போற்றப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home