Monday, March 30, 2020

பன்முக ஆற்றல் நாயகன் அசோகன்( எ) கவிவளவன்
அவர்களுக்கு வாழ்த்துப்பா!

திருவாரூர் மாவட்டப் பின்னணி கொண்டே
அருந்தமிழ் ஆற்றலில் முத்தமிழ் ஆற்றல்
பெருகிட வாழ்பவர்! நன்கு பழகும்
பெருந்தன்மை கொண்டே, அடக்கம் பணிவின்
இருப்பிடமாய் வாழ்பவரை வாழ்த்து.

பட்டங்கள் பலவென்றார்! சுங்கத் துறையில்
நித்தம் பணியாற்றி ஆற்றல் அலுவலராய்
சுங்க முரசுதனைக் கையெழுத்து ஏடாக்கி
தங்கத்  தமிழுக்குப் பங்களிப்பைச் செய்தவர்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


பாவலர் நாவலர் மற்றும் கலைப்படைப்பில்
ஆவல் மிகுந்தவர்! எண்ணற்ற நூல்களை
ஆர்வமுடன்  இங்கே படைத்தவர்! சந்தகவி
ஆர்க்கும் கவிஞரை வாழ்த்து.

எழுத்துக் களத்தின் இணைய தளத்தில்
அருமைத் தமிழ்நூல்கள் காணலாம்,! மின்நூல்
அருமையாய் ஆக்கும் திறனுக்கு வாழ்த்து!
பெருமையுடன் தந்தையைப் போற்றிக் கவிதை
வரிகள் படைத்தவர் பெற்றோரின் ஆசி
நிழலிலே வாழ்பவரை வாழ்த்து.

ஆரூர் அசோகன்! தமிழைத் துறக்காத
பாவூர் அசோகன்! கவிவளவன் ஆகிவிட்டார்!
நாவூரில் பாவூரைக் கொண்டாடும் பாவலர்!
நாமணக்க வாழ்த்துவோம் சூழ்ந்து.

வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தில் சந்தங்கள்
துள்ளக் கவிதரும் பாவலரை வாழ்த்து!
இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றும்
பண்பாளர்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்


அசோகன் இலக்கியம், கவிதை, சுங்கமுரசு, சுங்க இல்லம் என்று பல தளங்களில் இயங்கி வருகிறார்..

சுங்க இல்லத்தில் , தமிழ் முழக்கம் கேட்பதற்கு இவரும், உன்னிகிருஷ்ணன் காரண கர்த்தாக்கள்...

இலக்கியம் படிப்பவர்களுக்கு இதயம் தூய்மை என்பதற்கு இவரும் ஒரு சான்று...

வாழ்க.. வளர்க..

சி.ராஜேந்திரன்















0 Comments:

Post a Comment

<< Home