Monday, March 30, 2020

மாண்புமிகு
பிரதமர் மோடி -- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது  கொரோனாவைத் தடுக்கும் கடமை உணர்வுக்கு  வாழ்த்து!


நடுவண் அரசும் தமிழ்நாடும் சேர்ந்தே
முடுக்கும்  கொரோனா விழிப்புணர்வுக்
கான
நடுநிலைப் போக்கின் செயல்பாடு எல்லாம்
அடுக்கடுக்காய் நன்மை தரும்.

பாதித்த மக்களைச் சோதனை செய்வதிலும்
பாதிப்பை இங்கே தடுக்கும் முறைகளிலும்
ஈடில்லா அக்கறை கொண்டே எடுக்கின்றார்
நாடறிய திட்டமிட்டு தான்.

தொடர்வண்டி எல்லாம் மருத்துவக் கூடம்!
முகக்கவசம், மேலாடை, சோதனைப் பெட்டி
அடிப்படைத் தேவைப் பொருள்கள் விற்க
நடவடிக்கை என்றே கடமைப் பொறுப்பை
நடுவண் அரசு தலைமை அமைச்சர்
எடுப்பதை அன்புடன் வாழ்த்து.

முதலமைச்சர் நாளும் துறைதோறும் கூட்டம்
நடத்துகின்றார்! நாட்டின் நிலையை அறிந்து
நடவடிக்கை மேற்கொள்ள ஊரடங்கில் மக்கள்
நடமாட்டம் இன்றியே வீட்டுக்குள் வாழ
கடமைகள் செய்கின்றார் வாழ்த்து.

முடிந்ததை எல்லாம் நடைமுறை யாக்கி
வெறியாட்டம் போடும்  கொரோனாவின் தொற்றோ
மறைந்திட நாளும் உழைக்கின்றார் நாட்டில்!
மறையும் விரைவிலே நம்பு.

மக்கள், அரசு, அலுவலர்கள்
அக்கறையும்
எப்படியும் நாமோ கொரோனா பரவாமல்
ஒற்றுமையாய் ஒன்றாய்க் காட்டுகின்ற
ஆதரவும்
அற்புத மான கடமை, குழுஉணர்வும்
வெற்றிக்கே வித்தூன்றும் நம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home