Tuesday, March 31, 2020

திருக்குறள் ஆர்வலர் தனபால் அவர்களுக்கு வாழ்த்துப்பா!


நாமக்கல் ராசிபுரம் தந்த தனபால்
மாணவராய்ப் பட்டம் வனவியலில் சாதித்தார்!
காலம் குஜராத் பணிக்களத்தைக் காட்டியது!
ஆர்வமுடன் தன்கடமை நாளும் நிறைவேற்றி
வாழ்கின்றார் எல்லைக்குள் தான்.

மாவட்ட வனக்காப்பை ஏற்றார் மனமுவந்து!
போர்பந்தர் ஜாம்நகர் மற்றும் துவாரகா
தேவபூமி மாவட்ட எல்லை பசுமைமயம்
ஆக்கும் பொறுப்பையோ செவ்வனே மேற்கொள்ளும்
ஆக்கபூர்வ தொண்டில் தனபால் பரபரப்பாய்
ஊக்கமுடன் அங்கே உழைக்கின்றார் நாள்தோறும்!
ஆற்றல் தனபாலை வாழ்த்து.

அண்ணல் மகாத்மா காந்தி தடம்பதித்த
மண்ணில் பொறுப்பை நிறைவேற்றும் வாய்ப்பினை
இந்தப் பிறவியில் பெற்றவரை வாழ்த்துவோம்!
நம்குழுவின் ஆர்வலரை வாழ்த்து.

வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தில் தன்கருத்தைச்
சொல்கின்ற  நண்பர்! குறள்களின் ஆர்வலர்!
இல்லறத்தில் நல்லறத்தைப் போற்றும் குடும்பமுடன்
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

தனபால்.. நேசிப்பது , சுவாசிப்பது வனப்பணி. தனபால் ஓர் உண்மையான உணர்வுள்ள அதிகாரி..

மேற்கொண்டிருக்கும் பணியை திறம்படச் செய்பவர்..

வாழ்க, வளர்க

சி.ராஜேந்திரன்
குறள்நெறிக் குரிசில்











0 Comments:

Post a Comment

<< Home