Monday, March 30, 2020

ஆதம்பாக்கம் அரசுச் செயலகம் குடியிருப்பு!

இன்னிசை பாடும் பறவைகள்!

எங்களின்  தூக்கம் கலைவதே பூங்காவில்
அங்கங்கே உள்ள பறவைகளின் இன்னிசை
தங்கு தடையின்றி வந்துவந்து மோதுகின்ற
இன்பத்தில்தான்! வெவ்வேறு பண்ணமைத்தே வெவ்வேறு
இன்னிசை ஓசைகளைக் காற்றிலே தூதுவிட
எங்கள் செவிகளைத் தொட்டே உசுப்பிடும்!
எங்களது வீட்டுக்குப் பின்னால் அமைந்திருக்கும்
கண்கவரும் பூங்காவே புள்ளினத்தின்
தங்குமடம்!
சந்தயிசை கேட்போம் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home