Monday, May 25, 2020

கிழக்கு வெளுக்கிறது கீழடியில்!

50 ஆம் நாள் நிகழ்வு!

உரைவீச்சு: கவிஞர் பாலா
சிந்துவெளி ஆய்வாளர்
மதிப்புறு ஆலோசகர் ஒடிசா அரசு

தமிழியலன் அய்யா குழுவினர் கூட்டம்
இமைக்காமல் ஏற்பாடு செய்யும்  நிகழ்வோ
மிளிர்கின்ற பொன்விழா நாளாகும் இன்று!
தழைக்கட்டும் ஆயிரத்தைக் கண்டு.

கிழக்கு வெளுக்கிறது கீழடியில் என்ற
தலைப்பில் சிறந்த  உரைதந்தார் பாலா!
தரவுகளின் சான்றே தலையாய சான்றாய்க்
கரங்கொடுக்கும்  எனச்சொன்ன ஆய்வின் நிலையைப்
புரியவைத்த பேச்சுக்கு வாழ்த்து.

சங்க இலக்கியம் சொல்லும் பகடைக்காய்
இங்கே அகழாய்வில் கீழடி தந்திருக்கும்
இந்தப் பகடைக்காய் ஒன்றென அற்புதமாய்த்
தந்த விளக்கத்தை மெய்மறந்து கேட்டிருந்தேன்!
செந்தமிழ்போல் வாழியவே நீடு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home