Monday, May 25, 2020

Kavignarkamalkumar:
தென்றலுக்கு மூச்சுத் திணறல் ஏன்?

மங்கையின் நினைவில் மன்னவன் ஆழ்ந்து
அகமும் முகமும் ஆகமும் குளிர்ந்து
இன்னோரு உலகில் இருப்பவன் போலே
தன்னை மறந்து தன்னை உணராத்
தன்மை கண்டுத் தென்றல் சினந்து
மேலும் மேலும் மிகவும் வேகமாய்
வீசிய தாலே மூச்சும் திணறுமோ

கமல்
26.05.2020


பாட்டுக்குப் பாட்டு!

இருவர்க் கிடையே நுழையும் முயற்சி
இருவரும் தென்றல் நுழைவை வெறுக்க
செருக்குடன் தென்றல் முயலவே தோற்ற
நிலையிலே தென்றலுக்கு மூச்சுத் திணற
கலைந்தது சென்றதே காண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home