Thursday, June 25, 2020

முன்னோடிகள்!

யானைவரும் பின்னே மணியோசை தான்வரும்
யானைக்கு முன்னே! இதுபோல் குடும்பத்தில்
சாதனை செய்பவர் முன்னோடி யாகிடுவார்!
சாதிக்கும் இந்த மணியோசை முன்கேட்கும்!
சாதனையைப் பார்த்து மலைபோன்ற யானைபோல்
சாதிப்பார் பின்வந்தோர்! வந்ததும் முன்னோடி
வேடிக்கை பார்த்திருப்பார் யானை கடந்துபோகும்!
பாடிவந்த அந்த மணியோசை கேட்டதால்
ஆடிவந்த யானைக்குக் கைதட்டு தந்தார்கள்!
வேடிக்கை பார்த்த மணி.

மதுரை பாபாராஜ்

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை....

ஆள்வினையும்
ஆன்ற அறிவும்
எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி

சி ஆர்

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

0 Comments:

Post a Comment

<< Home