Wednesday, June 24, 2020

பலாப்பழம் பறித்த யானை!

தொலைக்காட்சியில் கண்டேன்!

காட்டுயானை ஒன்று பலாமரத்தைப் பார்த்தேதான்
வேட்கை யுடனே பலாவைப் பறித்தெடுக்க
கால்களை அந்த மரத்திலே வைத்தேதான்
நீட்டியது தும்பிக்கை யைத்தான் பழம்நோக்கி!
ஆட்டியதும் அந்தப் பழங்கள் விழுந்தன!
காட்டுயானை தன்பசியைத் தீர்த்த முறைகண்டேன்!
காட்சியைக் கண்டேன் வியந்து.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home