Sunday, July 19, 2020

நதிபோல் கொரோனா!

அமைதியாக ஓடும் நதிபோலத் தோன்றும்!
இமைக்கும் பொழுதில் எழுந்தேதான் சீறும்!
கரைதாண்டி வெள்ளம் மனைக்குள்ளே பாயும்!
நினைத்துச் சமாளிக்கும் முன்பே கலக்கம்
வளைக்கும் நிலைமை தலைகீழாய் மாறும்!
நிலைகுலைவார் மக்கள் அழுது.

உலகே அமைதியாய் வாழ்ந்தபோது இந்தக்
கொரோனா பரவிய வேகத்தில் மக்கள்
பரபரப்பை எல்லாம் முடக்கி முடங்கும்
ஒருநிலையை உண்டாக்கி இந்த உலகே
கரம்பிசைய வைத்துத் திகைத்திட வைத்துப்
பலரைப் பலிகொண்ட தே.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home