Saturday, September 19, 2020

பாலாவின் சங்கச்சுரங்கம்

 பாலாவின் சங்கச் சுரங்கம்


19.09.20


தலைப்பு:

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்


நற்றிணை


நெய்தல்


விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று

----------------------------------------------------------------

பாலாவின் சங்கச் சுரங்கம்


19.09.20


தலைப்பு:

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்


நற்றிணை


நெய்தல்


விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று

----------------------------------------------------------------

தோழியின் அம்மாவும் மற்றவரும்  சேர்ந்தேதான்

ஆழிக் கரையில் விளையாடும் நேரத்தில்

ஆர்வமுடன் புன்னை மரவிதையை மண்ணுக்குள்

ஆழப் புதைத்துவிட்டுத் தேடினர் மறந்தேதான்!

வேர்விட்டு வந்த மரத்தை வளர்த்தனர்!

நாள்தோறும் நெய்யும் வெண்பாலும் இட்டேதான்!

தான்வளர்த்த தாலே உடன்பிறப்பாய்

 ஆனதே!

நீயெந்தன் அன்புத் தலைவியைக் கண்டுபேச

பாரிங்கே மற்ற மரங்களெலாம் உள்ளன!

நீங்களங்கு செல்லுங்கள்! அக்காமுன் நின்றுபேசல்

ஏனோதான் வெட்கமாய் உள்ளதென்றாள் அத்தலைவி! சங்கச் சுரங்கமிது!

தெள்ளுதமிழ் முத்தே இது.


நற்றிணைப் பாடல் வரியெடுத்துப் பேசுகின்றார்

நற்றமிழில் பாலாதான் சங்க இலக்கியத்தை!

சற்றும் சளைக்காமல் வாய்ப்பைப் பயன்படுத்தும்

அக்கறையைப் பாவினத்தால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


நற்றிணைப் பாடல் வரியெடுத்துப் பேசுகின்றார்

நற்றமிழில் பாலாதான் சங்க இலக்கியத்தை!

சற்றும் சளைக்காமல் வாய்ப்பைப் பயன்படுத்தும்

அக்கறையைப் பாவினத்தால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home