Saturday, September 19, 2020

பாரதி நெல்லையப்பர் மன்றம்

 ZOOM இணையவழி பாராட்டு விழா!


19.09.2020

காரிக்கிழமை


காலை 10:00 மணி


*பரலி நெல்லையப்பர் மன்றம்*


விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி


மாண்புமிகு அமைச்சர்

திரு

*மாஃபா பாண்டியராஜன்*


விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

------------------------------------------------------------------

நிகழ்ச்சிக்கு வாழ்த்து:


நெல்லை சாய்சகோதரிகள்:


பாரதி பாடலை உள்ளங் கவருமாறு

ஆர்வமுடன் பாடினர் வாழ்த்து.


நடனம்


ஆற்றலுடன் ஆடி நடனக் கலையினைப் போற்றும் திறமை மிளிர வெளிப்படுத்திக்

காட்டினார்! நாளும் கலையார்வம் வாழியவே!

ஏற்றம் பெறுக மகிழ்ந்து.


நீதியரசர் வள்ளிநாயகம்


நெல்லையப்பர்  பாரதியை நட்பை விளக்கினார்!

நெல்லையப்பர் மன்றத்தின் தொண்டுகளைப் பாராட்டி

உள்ளம் மணக்கவே வாழ்த்தினார் நீதி

அரசர்தான்!

பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்து.


அறிமுக உரை:


மூவரையும் மூவர் அறிமுகம் செய்தனர் மூவரும் முன்னணிக்கு வந்துவிட்ட பின்னணியை

ஆவலுடன் கேட்டறிந்தோம்! மூவரையும் வாழ்த்துகிறோம்!

சாறைப் பிழிந்தளித்தார் வாழ்த்து.


அமைச்சர் உரை!


மன்றத்தை வாழ்த்தி விருதுபெறும் மூவருக்கும்

தன்னுடைய வாழ்த்தையும் கூறினார்! தம்மரசு

தொண்டை எடுத்துரைத்தே தாய்த்தமிழ்ப் பள்ளிகளின்

தன்மையைச் சொன்னவரை வாழ்த்து.


பாரதியின் தந்தை தொழில்முனைவோர்

என்றுரைத்தார்!

பாரதியின் தந்தை தொழில்கூடம் இன்றுமங்கே

காணப் படுவதால் சின்னமாக்கு வோமென்றே

ஆர்வமுடன் சொன்னார் மகிழ்ந்து.


வாழ்த்துரை:


வாழ்த்துரை பேசிய நண்பரின் வாழ்த்துக்கு

வாழ்த்துகளும் நன்றியும் உண்டு.


வாழ்த்துப்பா பாடியே பாமாலை சூட்டினார்

பாவலர் வாழ்கவென்று வாழ்த்து.


விருதுபெற்ற மூவர்!

மனிதநேயர் முத்துக் குமாரசாமி 

( நெல்லையப்பர் விருது)


சந்தியா நடராசன்

( நெல்லையப்பர் விருது)


கவிஞர் தமிழ் இயலன்

( வாசல் வசந்தப்பிரியன் நினைவாக

அமிர்தக்கவி விருது)


மூவருக்குத் தந்தனர் மூன்று விருதுகள்!

நாவலர் பாவலர் என்றேதான் பன்முக

ஆற்றலைக் கொண்டவர்கள் மூவருமே!

போற்றுவோம் வாழ்த்துவோம் சேர்ந்து.


மன்றத்திற்கு வாழ்த்து


பாரதி நெல்லையப்பர் மன்றத்தின் நற்பணிகள்

சீரும் சிறப்போடும் நாளும் வளரட்டும்!ஆர்வமுடன் தொண்டாற்றும் பண்புகளை வாழ்த்துவோம்!

பார.புகழ் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்





























0 Comments:

Post a Comment

<< Home