Wednesday, September 16, 2020

ஒரே குறளில் ஐவகை நிலங்கள்

 நண்பர் தீத்தாரப்பன் விளக்கம


ஒரே குறளில் ஐவகை நிலங்கள்!


"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு." இக்குறளில் ஐந்து உவமைகள்! ஐந்தும் ஐவகை நிலங்களுக்கு உரியன! வேய்த்தோள் - மூங்கில் (குறிஞ்சி), வெறிநாற்றம்- முல்லை மலர்(முல்லை), முறிமேனி- மாந்தளிர்(மருதம்), முத்தம் முறுவல் - முத்து(நெய்தல்), வேலுண்கண் - வேல்(பாலை)

---------------------------------------------------------------

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1113)

---------------------------------------------------------------

முறிமேனி மாந்தளிர் தேகம் மருதம்!

முறுவலோ முத்தென்றார் நெய்தல் நிலமே!

துறுதுறு வேலுன்கண்  பாலை நிலமே!

வெறிநாற்றம் பூமணம் முல்லை நிலமே!

செறிவான வேய்த்தோள் மூங்கில் குறிஞ்சி!

குறளிலே ஐந்து வகைநிலங்கள் தந்தார்!

சிறப்பாக தீத்தாரப் பன்.


மதுரை பாபாராஜ்

Picture by Dr.NVK ASHRAFF


0 Comments:

Post a Comment

<< Home