Monday, January 18, 2021

87 பகைமாட்சி

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

87 பகைமாட்சி

குறள் 861:

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.


வலிமை படைத்தவரா போர்செய்ய வேண்டாம்!

வலிமையற்றோர் என்றால் எதிர்.

குறள் 862:

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.


அன்பின்றி, தக்க வலுவின்றி, ஆற்றலின்றி

உள்ளோர் பகைவெல்தல் ஏது?

குறள் 863:

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.


அஞ்சுவதற் கஞ்சாமல் ஒற்றுமையாய் வாழாமல்

நெஞ்சில் இரக்கமும் இல்லாமல் வாழ்பவனை

வெம்பகை  வெல்தல் எளிது.

குறள் 864:

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.


கோபத்தைக் கைவிடாத, காப்பதைக் காக்காமல்

ஆள்வோரை வெல்தல் எளிது.

குறள் 865:

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க் கினிது.


நல்வழியில் செல்லாமல் நல்லதைச் செய்யாமல்

எப்பழிக்கும் அஞ்சாமல் பண்பின்றி வாழ்பவனை

எப்பகையும் வெல்தல் எளிது.

குறள் 866:

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.


எப்போதும்  சீறுவோனை  பேராசைக் கொண்டவனைச்

சுற்றும் பகைவெல்லும் சொல்.

குறள் 867:

கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து

மாணாத செய்வான் பகை.


உடனிருந்தே தாறுமாறாய்ச் செய்வோர்

பகையைப் 

பொருள்கொடுத்தும் பெற்றுக்கொள் இங்கு

குறள் 868:

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்

கினனிலனாம் ஏமாப் புடைத்து.


பண்புமின்றி, குற்றம் பலபுரிந்தோர் எத்துணையும்

இன்றியே சீரழிவார் தோற்று.

குறள் 869:

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.


அறிவிலியாய் கோழையாய் இங்கே பகைவர்

அமைந்துவிட்டால் என்றும் எதிரணிக்கு வெற்றி

நிரந்தரமாய் மாறிடும் செப்பு.

குறள் 870:


கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லா தொளி.


கற்கா தவனைப் பகைக்கும் செயல்செய்ய

முற்படாத மாந்தரிடம் எந்தப் புகழ்மகுடம்

தங்கித் தழைக்குமென்று சாற்று?


மதுரை பாபாராஜ்




























0 Comments:

Post a Comment

<< Home