Monday, January 18, 2021

89 உட்பகை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

89 உட்பகை

குறள் 881:

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்.


நீரும் நிழலும் கெடுதிசெய்தால் தீமையே!

சேர்ந்திருக்கும் உற்றார் உறவினரின் பண்பிலே

வேரோடும் உட்பகையும் தீது.

குறள் 882:

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.


வாள்போல் தெரியும் பகைக்கஞ்சத் தேவையில்லை!

தோழமையில் உட்பகை நஞ்சு.

குறள் 883:

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.


உட்பகைக்கோ அஞ்சித்தான் காக்கவேண்டும்! இல்லையேல்

மட்கலத்தைச் சீரழிக்கும் வாள்போல்

அழித்துவிடும்!

உட்பகை வேரறுக்கும் வாள்.

குறள் 884:

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும்.


நண்பராய்த் தோன்றினாலும் உட்பகையைத் தேங்கவிட்டால்

என்றுமே நட்பிற்குக் கேடு.

குறள் 885:

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும்.


உறவுகளின் உள்ளத்தில் உட்பகை என்றால்

இறக்குமட்டும் துன்பந்தான் சொல்.

குறள் 886:

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.


ஒன்றாய் இருந்தோரின் உட்பகை குமுறினால்

என்றும் அழிவுதான் சொல்.

குறள் 887:

செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி.


பொருந்திய மூடிபோலத் தோன்றினாலும்  உள்ளே

பொருந்தாதே உட்பகையைத் தேக்கும் உறவு!

வருந்தவைத்துப் பார்க்கும் வெடித்து.

குறள் 888:

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு

துட்பகை உற்ற குடி.


உட்பகை உள்ள குடும்பம் அரம்தேய்க்க

முற்றும் அழியும் இரும்பு.

குறள் 889:

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.


எள்ளின் பிளவாய்ச் சிறிதெனினும், உட்பகை 

துள்ளவைக்கும் மாபெரும் கேடு.

குறள் 890:

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போ டுடனுறைந் தற்று.


உடன்பாடே இல்லாமல் சேர்ந்திருக்கும் வாழ்க்கை

குடிசைக்குள் பாம்புடன் போல்































0 Comments:

Post a Comment

<< Home