Friday, January 29, 2021

பாலாவின் சங்கச் சுரங்கம் வாழ்த்து

 கவிஞர் பாலாவுக்கு வாழ்த்து

கவிஞர். பாலாவின் சங்கச்சுரங்கம்

மூன்றாம் பத்து ஆறாம் உரை! 

30.01.21

இணையவழி சொற்பொழிவு!


தலைப்பு:

செய்தி கொன்றார்க்கு உய்தி இல்.

புறநானூறு


மன்னன் வளவனிடம் பரிசுகள் பெற்றேதான்

தன்வழி செல்ல கிழார்தான் விடைபெற்றார்!

மன்னன் எனைநினைத்து மீண்டும் வருவீரா?

அன்புடன் கேட்டானாம்! செய்நன்றி கொன்றார்க்கு

எந்நாளும் உய்வில்லை! உன்னை மறவேன்நான்

என்றாராம் ஆலத் தூர்கிழார்! என்றேதான்

சங்க இலக்கியம் கூறுகின்ற நன்னெறியை

சங்கச் சுரங்கத்தில் பேசுகின்றார் பாலாதான்!

வண்டமிழ்போல் வாழ்கவென்றே வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home