Thursday, January 28, 2021

1330 குறள்கள் ஓலைச்சுவடியில்


 ஓலைச்சுவடியில்

1330 குறள்களை எழுதிய பஞ்சாப் ஜஸ்வந்த்சிங் வாழ்க!

தற்போது முகப்பேர் சென்னை


ஆர்வத்திற் குண்டோ அடைக்கின்ற தாழென்றே

ஆர்வமுடன்  ஓலைச் சுவடியில் ஜஸ்வந்த்சிங் 

பாடுபட்டு நாளும் குறளை எழுதியுள்ளார்!

ஏடுபோற்ற வாழ்கபல் லாண்டு.


ஓலைச்சுவடி தயாரித்தல்!


இளம்ஓலை தன்னை எடுத்துவைத்து

ஜாதிக்காய்

நலமளிக்கும் பப்பாளி பச்சையிலை சேர்த்து

கலந்தேதான் தண்ணீரில் ஊறவைத்து

பார்த்து

நிழலிலே காயவைக்க வேண்டும்! நல்ல

பதமான பின்புதான் பாதுகாக்க வேண்டும்!

முதல்நிலை இந்த முறை.


எழுத்தாணி எழுதும் முறை:


முதலில் மணலில் எழுதிப் பழகி

பிறகு படிப்படி யாக ஓலை

இதழில் எழுதலாம்! ஆனால் எழுத்து

தெரியாது! நாமோ கரிசலாங் கண்ணி

அருமையான கீரையைக் காயவைத்து

பார்த்தே

எரித்தேதான் எண்ணெய் கலந்து கொண்டு

தெளிவாக ஓலையில் பூசவேண்டும்!

பிறகு

துணியின் துணையால் துடைத்தால் துலங்கும்

எழுத்துகள் என்கிறார் சிங்.


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home